Sunday, November 16, 2008

சரித்திரம் படைக்கும் இந்திய ஓவியங்கள்


உலக நாடுகள் பலவற்றுக்கு முன்னோடியாக இருந்தது இந்தியக் கலாசாரம். இது மிகவும் தொன்மையான கலாசாரம். மேற்கத்திய நாடுகளில் மக்கள் சேர்ந்து வாழத்தொடங்கும் முன்னரே தோன்றிய கலாசாரம். இத்தகைய தொன்மையான நாகரிகத்தையும் கலாசாரத்தையும் கொண்ட இந்தியாவில் இல்லாத கலைகளே இல்லை எனலாம். எப்படி இந்திய நாகரிகம் மற்ற நாகரிகங்களுக்கு முன்னோடியாக இருக்கிறதோ அதே போல் கலைகளும் பல மற்ற நாட்டுக் கலைகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றன. இதற்குச் சிறந்த சான்றாக இந்திய ஓவியக் கலையினை எடுத்துக் கொள்ளலாம். முதல் இந்திய ஓவியங்கள் என்ற பெருமையினை வரலாற்றுக்கும் முந்தைய கால பாறை ஓவியங்களே பெறுகின்றன.

பிம்பெட்கா என்ற இடத்தில் உள்ள பாறை ஓவியம் சுமார் கி.மு 5500ஆம் காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லோரா தூண்கள் மிகச் சிறந்த இந்திய ஓவியங்களைத் தாங்கி நிற்கின்றன. இந்த ஓவியங்களில் உள்ள சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் பலதரப்பட்ட தாமிரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இயற்கை பொருட்களில் வண்ணங்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஏழாம் நூற்றாண்டு காலத்திலேயே இந்திய ஓவியர்களுக்குத் தெரிந்தது. சில பெளத்த இலக்கியங்களில் அக்கால மன்னர்களின் அரசவையில் ஓவியத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவற்றில் பல கட்டிடங்கள் இப்போது இல்லாததால் அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க இயலவில்லை.

முதலாம் நூற்றாண்டுக் காலத்தில் இந்திய ஓவியங்களுக்கு சதங்கா என்ற பெயரில் சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. சதங்கா என்றால் ஆறு கரங்கள் என்று பொருள். ஆறு விதமான வழிமுறைகளைக் கூறியிருந்தமையால் அதனை சதங்கா என்று அழைத்தனர். இதனைத் தொடர்ந்து வந்த பெளத்த ஓவியங்கள் இந்த சதங்கா இந்திய ஓவியங்களில் கடைபிடிக்கப்பட்டதற்குச் சான்றாக விளங்குகின்றன. ரூபபேதா, பிராமனம், பவா, லாவண்ய யோஜனம், சத்ஸ்யம், வர்ணிகபங்கா என்று ஆறு விதமான வழிமுறைகளைச் சதங்கா என்று அழைத்தனர். இதில் ஓவியத்தின் தோற்றம் குறித்துச் சொல்வது ரூபபேதா. ஓவியத்தின் சரியான அளவுகளைச் சொல்வது பிராமனம், ஓவியத்தின் உணர்வுகளைச் சொல்வது பவா, ஓவியத்தின் கலைநயத்தைச் சொல்வது லாவண்ய யோஜனம், ஓவியம் வரைய சரியான முறையில் வண்ணம் மற்றும் வரையும் கோல் பிரயோகம் பற்றிக் கூறுவன சத்ஸ்வம் மற்றும் வர்ணிகபங்கா ஆகும்.

16ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவின் மேற்குப் பகுதியில் மினியேச்சர் ஓவியம் என்ற வகை ஓவியங்கள் உருவாகின. இந்தச் சிற்றோவியங்கள் அந்தக் காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஓவிய விளக்கங்கள் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டன. சில ஜெயின் புத்தகங்களில் இதுபோன்ற சிற்றோவியங்கள் விளக்கப் படங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டிலிருந்து நான்கு அங்குல அளவில் இருந்தன.

11 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகளில் இருந்த பெரிய அளவிலான சுவர் ஓவியங்களே பிற்காலத்தில் உருவான சிற்றோவியங்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த வகை சிற்றோவியங்கள் முதலில் பனை ஓலைகளில் எழுதப்பட்ட எழுத்துக்களுக்கு விளக்கமாகவே வரையப்பட்டன. இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் பெளத்த மற்றும் ஜெயின் இலக்கியங்களாக இருந்தன. கிழக்கு இந்தியாவில் புத்த மதத்தின் கலைக் கூடமாக நளந்தா, ஓதண்டபு, விக்ரம்ஷிலா மற்றும் சோமர்புரா ஆகிய இடங்கள் இருந்தன.

அடுத்ததாக இந்திய ஓவியங்களுக்குப் பெருமை சேர்த்தது மொகல் ஓவியங்கள். 14ஆம் நூற்றாண்டு வரை எழுத்துப் படைப்புக்களுக்குப் பனை ஓலைகளே பயன்படுத்தப்பட்டன. 14ஆம் நூற்றாண்டில் தான் பனை ஓலைகளுக்குப் பதிலாக எழுத்துப் படைப்புக்களுக்கு பேப்பர் அறிமுகப்படுத்தப்பட்டது. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் ஜெயின் வகை ஓவியங்கள் முக்கியத்துவம் பெற்றன. மன்னர் நசிர் ஷா காலத்தில் நிமத்னமா என்ற புத்தகத்தில் மண்டு என்ற ஓவியர் வரைந்த சிற்றோவியங்கள் ஓவியக் கலையில் ஒரு புதிய பாதையை வகுத்தன. பின்னர் அக்பர் காலத்தில் இந்திய சிற்றோவியங்கள் புதியதோர் பரிமாணம் பெற்றன. இந்தியாவில் முதல் கலைக் கூடம் அமைத்த மன்னர் என்ற பெருமை அக்பரைச் சேரும். இந்தக் கலைக்கூடத்தில் மிர் சய்யத் அலி மற்றும் அப்தும் உல் சனாத் கான் என்ற இரு பெர்சிய ஓவியர்களின் மேற்பார்வையில் இந்திய ஓவியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அக்பர் கட்டிய ஃபதேபுர் சிக்யினை அலங்கரிக்க ஏகப்பட்ட கலைஞர்கள் பணி செய்தனர்.

இவ்வாறு இந்திய ஓவியங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வளர்ந்துள்ளன.

Tuesday, October 28, 2008

இந்திய இஸ்லாமிய கட்டிடக்கலை


இந்தியாவில் புகழ்பெற்ற பல கலைகளுள் கட்டிடக் கலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய வரலாற்றில் பல காலகட்டங் களில் கட்டிடக்கலை பலவிதமான மாறுதல்களைக் கண்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் இஸ் லாமியர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்ட கட்டிடங்கள் இன்றளவும் காலத் தால் அழியாத நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன.

இந்திய இஸ்லாமிய கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் விளங்குகிறது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இந்திய இஸ்லாமியக் கட்டிடக் கலை குறித்துக் காண்போம். இஸ்லாமியர்கள் இந்தி யாவினுள் 12ம் நூற்றாண்டில் நுழைந்து, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்திய கட்டிடக் கலை யில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது என்றே சொல்லலாம். இவர்களது வரவுக்குப் பின்னர் இந்தியக் கட்டிடக்கலையினுள் சில புதிய உத்திகள் புகுத்தப்பட்டன.

உதாரணமாக இயற்கை வடிவங் களுக்குப் பதிலாக செதுக்கப்பட்ட வடிவங்களை உபயோகிப்பது, புனித எழுத்துக்களைப் பொறிப்பது, உட்புறக் கட்டமைப்புக்கு வண்ண மாபிள் கற்கள் உபயோகிப்பது எனப் பல மாறுதல் களைக் கொண்டு வந்தனர். இஸ்லாமியக் கட்டிடக் கலையில் காலியாக இருக்கும் இடங்களை கூம்பு கள் வைத்து அதனையும் அழகுபடுத்தி னர். ஆர்ச் மற்றும் கூம்புகள் அமைப்பது உண்மையில் இஸ்லாமியர்கள் கண்டு பிடித்தது இல்லை. இதனை அவர்கள் பிற்கால ரோமானியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

இஸ்லாமியர்கள் தான் இந்தியக் கட்டிடக் கலையில் முதன் முறையாகக் கட்டிடம் கட்ட சிமெண்ட் போன்ற பொருளை உபயோகித்தனர். மேலும் கட்டிடம் கட்டுவதில் சில விஞ்ஞானப் பூர்வ முயற்சிகள் செய்தனர். இதன் காரணமாகத்தான் இன்றள வும் அந்தக் கட்டிடங்கள் எந்த வித சேதாரமும் இன்றித் திடமாக இருக்கின் றன. இதுபோன்று இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக் கலையும் இஸ்லாமிய முறையும் கலந்து உருவாகிய புதிய கட்டிடக் கலை இந்திய இஸ்லாமியக் கட்டிடக்கலை என்று அழைக்கப்பட்டது.

இஸ்லாமியக் கட்டிடக் கலை இந்தியாவினுள் பிரபலமடைவதற்கு முன்னரே எகிப்து, ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் பிரபலமடைந்துவிட்டது. எனினும் இந்த நாடுகளில் செங்கல், பிளாஸ்டர் போன்ற பொருட்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களே இருந்தன. ஆனால் இந்திய இஸ்லாமியக் கட்டிடக்கலையில் அலங்காரக் கற்கள், டைல்ஸ்கள் உபயோகிக்கப்பட்டன. இந்தியக்கட்டிடக் கலை நிபுணர்கள் பல நூற்றாண்டுகளாக கற்களைக் கையாளு வதில் வல்லவர்களாக இருந்ததனால் இது சாத்தியமானது. இந்தியாவிலுள்ள இஸ்லாமியக் கட்டிடங்கள் மதம் சார்ந்தது மற்றும் பொது வானது என இரண்டு வகையாக உள்ளன. மசூதிகளும், மினார்களும், இஸ்லாமி யர்களின் ஆன்மீக வழிபாட்டுத் தலங்களாக விளங்குகின்றன. இஸ்லாமிய அரண்மனைகளும், கோட்டைகளும் பொதுவானதாக அமைக்கப்பட்டிருக் கின்றன. இந்திய இஸ்லாமியக் கோட்டைகள் அதனுள் ஒரு சிறிய நகரை உள்ளடக்கி யிருக்கின்றன. மேலும் கோட்டையின் சுற்றுப்புறத்தில் எதிரிகளைத் தாக்குவ தற்கான ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக் கின்றன. இந்திய மசூதிகளில், பிரம்மாண் டங்களும் மிகவும் குறைவு. மசூதிகள் ஒரு திறந்த வெளியினைச் சுற்றிலும் தூண்கள் அமைக்கப்பட்ட தாழ்வாரங் களையும் கொண்டிருக்கும். அவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய திசையினைக் குறிக்க மிஹ்ரப் அமைக்கப்பட்டிருக்கும். இதன் வலப்புறத்தில் மிம்பார் அமைக்கப் பட்டிருக்கும்.

இங்கிருந்துதான் இமாம் வழிபாட் டினை நடத்துவார். அங்கிருக்கும் ஒரு உயர்த்தப்பட்ட மேடையில் இருந்து தான் வழிபாட்டுக்கு மக்களை அழைப் பர். இதுபோக இறந்த உடல்களை அடக்கம் செய்ய டூம்கள் உள்ளன. இவை மசூதிகள் போல் சாதாரண மாக இல்லாமல் சிறந்த அலங்காரங் களைக் கொண்டிருக்கும். இதற்கு உதாரணமாக இந்தியாவில் தாஜ் மஹாலையும், மைசூரிலுள்ள கோல்ரும்பஸ் ஆகியவற்றையும் குறிக்கலாம்!

நாட்டியத்திற்கு


பரதநாட்டியம் என்ற கலை அடையாளப்படுத்துவது அது தரித் திருக்கும் ஆடைகளையும், அணி கலன்களையும் சார்ந்தது என்று சொன்னால், அதை மறுப்பவர் யாருமில்லை. அந்த கலையை சுவாசிப்பவர்களும்,,ரசிப்பவர் களும் பெருகிவருவதற்கு இந்த தோற்றபொலிவு கூட ஒரு காரணம் என்று கூறலாம். ஒரு கலைஞரின் பார்வையிலும்,பார்வையாளர் களின் கோணத்திலும் பரதம் என்ற கலை மனதில் பதிந்திருப்பது ஒப்பனை,விசேட அணிகலன் மற்றும் ஆடை கலந்த கலவை யாகத்தான்.

""ஒரு கலை, எந்தவித தொழில் நுட்ப உதவியும் இல்லாமல், இசைக்கலைஞர்களை மட்டும் உதவிக்கரமாக கொண்டு செயல்பட்டு, பார்வையாளர்களையும், தன்னையும் இன்றளவிலும்கவர்ந்திருக்கிறது என்றால் அது பரதநாட்டியம் என்ற கலையாக மட்டும்தான் இருக்கும்'' இது பரதம் பற்றி பிரான்சு நாட்டு இதழ் வெளியிட்ட குறிப்பு. இதை இங்கே குறிப்பிட வேண்டியதன் அவசியம் என்னவெனில், பரதக்கலையை ஜீவன் குறையாமல் வைத்திருக்கச் செய்யும் சிலவற்றைப் பற்றி கூறு வதற்காகத்தான். நாட்டிய கலைஞருக்கு ஆடை, சலங்கை, ஆபரணங்கள், ஒப்பனை ஆகியவற்றில் தற்போது மற்றவர் கள் உதவி செய்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இவையெல்லா வற்றையும் நாட்டியம் கற்பிக்கும் குருக்களே கவனித்துக் கொண்ட னர். ஆனால் தற்போது இதற் கென்று பல தனியார் நிறுவனங் கள் செயல்படுகின்றன. அதே போல்.நாட்டியத்தில் பயன்படுத்தப் படும் தாளம், தாளக்கட்டை ஆகிய வற்றையும் தற்போது சில தனியார் நிறுவனங்களே அமைத்து தருகின்றன.

சலங்கையை பொறுத்தவரை பழங்காலத்தில் கும்பகோணம் பகுதியில் தயாராகி வந்ததைத் தான் அனைத்துக் கலைஞர்களும் பயன் படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது குஜராத் மாநிலத்தில் தயாராகி வரும் எடை குறைந்த சலங்கையைதான் அனைத்துக் கலைஞர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் ஆடையிலும் தற்போது பல வண்ணங்கள் கலந்ததையும், விசேடமாக வடிவமைக்கப் பட்டதையும் அணிகிறார்கள், ஆனால் யாரும் இந்த விசிறி மடிப்பை அவ்வளவாக விரும்பு வதில்லை. இருந்தாலும் பாரம் பரியம் கருதி இதனை போற்றி பாதுகாத்து வருகின்றனர். தாளத் திலும் தற்போது எடை குறை வானதையே ஜதி சொல்பவர் களும், நட்டுவானர்களும் விரும்பு கின்றனர். அணிகலன்கள் அணி வதிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. எடை குறைவாகவும், தங்க முலாம் பூசப்பட்டதையும் தான் விரும்புகின்றனர். ஒரு சிலரே வைரம் பதித்த தங்க நகைகளை விசேடமாக வடிவமைத்து அணிகின்றனர்.

ஆடை,அணிகலன், தாளம் உள்ளிட்ட பரதநாட்டியத்திற்கு தேவைப்படும் அனைத்திலும் பாரம்பரிய அடையாளத்தை மீறா மல் புதுமை புகுத்தப்பட்டு வருவதை அனைவரும் வரவேற்க தொடங்கியிருப்பது சிறந்த மாற்றத் திற்கான அடையளங்கள் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிப் பதை நாமும் ஆமோதிப்போம்.

சைவமும் கலையும்

பண்டைச் சமயத் தோற்றத்திற்க்கு மானுடவியல் அறிஞர் பல்வேறு காரணங்களைக் காட்டுக்கின்றன.
அவற்றுள் உலக் கோட்பாடு, இயற்கைக் கோட்பாடு, முன்னோர் வழிபாட்டுக் கோட்பாடு
என்பன சிறப்பாக்க சுட்டத்தக்கவை. தமிழர் தம் பண்டைச் சமயக்கூறுகளுள், வழிபாட்டு
கூறும், இயற்கை வழிபாட்டுக் கூறும், முன்னோர் வழிப்பாடுக் கூறும் கலந்து இயைந்தே உள்ளன. சமய வாழ்வின் தொடக்க நிலையினை பிரெஞ்சு சமூகவியல் அறிஞர் எமில் துர்க்கேம், குலக்குறியே, அதனைச் சார்ந்த நம்பிக்கையே சமயமாக வளர்ச்சி கொண்டது என்கிறார். ஆஸ்திரேலியாவில் வாழும் அருண்டா பழங்குடிமக்களை தாரமாகக் கொண்டு தம் கொள்கையை அவர் உருவாக்கி விளக்கினார். மக்கள் ஒரே மாதிரியாகப் போய்க் கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கையில் சலிப்பு அடைகிறார்கள். அந்தச் சலிப்பில் இருந்து விடுதலை பெற எல்லோரும்
ஆட்ட பாட்டத்தில் கழிக்கிறார்கள். இந்த ஆட்டப்பாட்டம் ஆரவாரத்தோடு வெறித்தனமாக அமைகிறது. எனவே அதில் கலந்துக் கொள்ள வேசம் வருகிறது. கொஞ்ச நேரத்தில் வந்த வேசம் அடங்க ஆட்டம்பாட்டங்கள் நின்றுபோகின்றன.

எப்படி இந்த வேகம் வருகிறது, எப்படி அது போகிறது என்று அவர்கள் எண்ணத் தொடங்கிறார்கள். ஏதோ ஒரு நுட்பமான- அருவருமான மறைமுக சக்திதான் காரணமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள்.
அது வெளியே இருந்து மக்கள் உடலில் புகும்போது மக்களுக்கு வேசம் வந்துவிடுகிறது.
விலகிப் போகும் போது வேசம் போய்விடுகிறது.

இந்தச் சக்தியை அருண்டா மக்கள் 'மான' என்று குறித்தனர். அதனைப் பூசித்து வழிப்பட்டனர். அந்த உருவத்தைப் புனிதமாகக் கருதி வழிப்பட்டனர். அதனை ஒட்டியே பூசைகள் சடங்குகள் தோன்றின. அந்த உருவமே குலக்குற [totem] எனப்படும். உருவங்கள் மட்டும் அல்லாமல் தாவரங்கள், விலங்குகள், இயற்கைப் பொருள்கள் முதலியனவும் சக்தியின் இருப்பிடமாகக் கருதப்பட்டு, புனிதப்பொருள்களாகப் போற்றினர்.

தமிழர் ஆ தி சமயக் கூறுகளிலும் இக்குலக்குறி இருந்ததை நம் பழைய வரலாறு காட்டுகிறது.
கல், லிங்கம், புனித மரங்கள் நந்தி, நாகம் போன்ற விலங்குகள், பருந்து, மயில்,
போன்ற பறவைகள், தமிழர் வழிப்பாட்டில் வழிபாட்டு கூறுகளாக இருப்பதைக் காணலாம்.

தமிழர் சமயத்தில் உருவ வழிப்பாடு தவிர்க்க முடியாததாயிற்று. இந்த உருவம் சமைக்கும் முறையே சிற்பக் கலைக்கு மூல ஊற்றாக அமைந்திருக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் போரில் மடிந்த வீரருக்கு நடுகல் நட்டு, பேரும் ஊரும் எழுதி வழிபடப் பெற்றதாக பழைய இலக்கியகளில் காணலாம். அண்மையக் காலங்களில் வட தமிழகத்தில் கல்வெட்டுகளோடு கூடிய உருவம் பொறித்த நடுகற்கள் கிடைத்துள்ளது. நடுகல் வழிப்பாடு எனும் முன்னோர் வழிபாடு சிற்பக் கலையோடு சேர்ந்து ஒன்றாகத் திகழ்கிறது.

சைவ சமயத்தில் ஆ தி உருவமானதாகக் கருதப்பெறும் சிவலிங்கம் கி.மு 1500க்கு
முற்பட்ட சிந்திவெளி நாகரிகத்தில் கிடைத்தாகச் சொல்வார்கள். பழந்தமிழ் நூலான
தொல்காப்பியத்தில் கட்டப்பெறும் 'கந்தமி' என்பது சிவனைப் பற்றிய குறிப்பாகும் என்பர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை லிங்க உருவச் சின்னங்கள் கிருத்துவக்கு முற்பட்ட காலத்தில்
உள்ளவை இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.

கி.மு முதல் நூற்றாண்டைச் சார்ந்த லிங்க உருவம் ஒன்று பெட்ட[BHETS] எனும்
இடத்தில் கிடைத்தாகவும், அது லக்னோ அருங்காட்சியில் உள்ளதாக தொரிகிறது.

ஒவியக் கலையைப் பொறுத்தளவில் நடுகல்லில் சங்ககாலத்தில் எழுதப்பட்ட வீரனின்
ஒவியங்கள் மிகப் பழங்காலத்தன. சங்க இலக்கியங்களில் ஒவியம் பற்றிய குறிப்புகள் இடம்
பெற்றுள்ளன. அகநாநூறு, நற்றிணை, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை
போன்றவறில் ஓவம்- ஓவியம் என்னும் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

சிலப்பதிகாரத்தில் திரையில் எழுதப்பட்ட ஒவியங்களை பற்றிய குறிப்புகள் இடம்
பெற்றுள்ளன. கதை ஓவியங்களைப்பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. நெடுநல்வாடை, அகம், மணிமேகலை பாடல்களில் ஓவிய நூல் ஒன்று இருந்தாக அடியார்க்கு நல்லார் உரையில் குறிப்பு ஒன்று வருகிறது. திருப்பரங்குன்றத்தில் கவுதம் முனிவர் தம் மனைவி அகலிகையையும், இந்திரனையும் சபித்த நிகழ்வு ஓவியமாக வரையப்பெற்றிருந்தது எனும் குறிப்பு பாரிபாடலில்கூறப்பட்டுள்ளது. மணிமேகலை, சிலப்பதிகாரம், பெருங்கதை,
சிந்தாமணி, திவாகர கண்டு, கம்பராமாணயம் ஆகியவற்றில் ஓவியம் பற்றி பல்வேறு குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பல்லவர காலத்திற்குப் பின்பு காஞ்சிபுரம், பனமலை, ரமா மலை, சித்தன்ன வாசல், தஞ்சாவூர், திருமலைபுரம், நர்த்த மலை கிய இடங்களில் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் சில ஆ லயங்களிலும், வைணவ ஆ லயங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிற்பக் கலை, ஓவியக்கலை ஆகியவற்றுக்கு அடுத்ததாக அல்லது அதற்கு இணையாக கருதத்தக்க தோற்றமும், வளர்ச்சியும், பெருமையும் உடையது இசை கலையாகும்.

இசை

தமிழர் வழிபாட்டு முறையை இசையிலிருந்து பிரிக்க முடியாது என்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிபடுத்துகின்றன. சைவ நாயன்மார்களால் தமிழ் இசை முறைப்படி தேவாரப் பாடல்கள் காலந்தோறும் இசைக்கப்பட்டன.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலானோர் வரலாறு இசைக்கருவியோடு இணைந்து அமைந்தாகும்.

பக்தி இலக்கியத்திற்கு முன்பே பாரிபாடல் தமிழிசை, தாளம், பண்கியவகை
தொகையோடு அமைக்கப் பட்டிருந்ததைக் காணுகிறோம். கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம் ஓதப் பெற்றததையும் தஞ்சைப் பொரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டு எடுத்துரைக்கின்றன. பிற்காலத்து அருணகிரி தம் திருப்புகழ் முழுவதாயும் பல்வேறு சிவத் தலங்களில் இசை மழைப் பொழிந்து கொட்டியதை அவர்தம் திருப்புகழ் வரலாறு எடுத்துரைக்கிறது.

தமிழ் இசையோடும் சைவத்தோடு இணைந்த பலரை வரலாற்றில் இருந்து காட்ட முடியும்.
தெலுங்கு மொழியின் தலையீடும் செல்வாக்கும் தமிழர் வரலாற்றில் குறுக்கிடுகின்ற வரை தமிழருக்கே உரிய இசை சிறந்து வளர்ந்து இருந்தது. தொடக்கத்தில் மானா சக்தி ஆ ட்டம் பாட்டத்தில் இருந்து அறியப்பெற்றது என்ற வரலாற்றையும் தமிழ் இசை இணைப்பையும் இணைத்துக் கருதின் தமிழர் இசைப்பழைமை தெளிவாகப் புலப்படும்.

ஆடற்கலை

இசைக் கலைக்கு இணையாச் சுட்டிக்காட்ட வேண்டியது ஆடற்கலையாகும்.
சிவனின் ஒரு தோற்றமான நடராச உருவம் உலகம் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த
ஆடவல்லான் உருவம், சைவ நாயன்மார் காலத்தில் உருக் கொண்டு, பிற்காலச்
சோழர் காலத்தில் மிகப் பெரிய அளவு பரவிய ஒன்றாகும். நடராச உருவத்தில்
ஆயிரக்கணக்கான வெண்கலப் படிமங்களாகும், பல்லாயிரக்கணக்கான படைப்பு
உருவச் சிற்பங்களும் தமிழகக் கோயில்களில் காணப்படுகின்றன. ஆடற்கலை தமிழர்
பெரும் வல்லுநர் என்பதைச் சிலப்பத்திகாரமும், குறிப்பாக அரங்கேற்று காதையும்
குன்றக் குரவை, ஆய்சுயர் குர்வையும் எடுத்துக்காட்டும்.

மாதவி ஆ டலிலும், யாழ் மீட்டுவத்திலும், இசை பாடுவதிலும் பெரும் ஆ ற்றல்
பெற்றிருந்தாள் என்று சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டுகின்றது. ஆடல், இசை தொடர்பான
இலக்கண நுல்களைத் தமிழர்கள் பெற்றிந்தனர் என்று அடியார் நல்லார் உரை
தெளிவுபடுத்துகின்றது.

சோழர் காலம் தொடங்கி, கோயில்களில் ஆ டல் வல்ல மகளீர் அமர்த்தப்
பெற்றிருந்ததைக் கல்வெட்டுச் செய்திகள் வலியுறுத்துகின்றன. கூத்து என்பதே
ஆடலையும், நாடகத்தையும் குறிக்கும் சொல்லாகத் தமிழரிடையே புழங்கியது.
வேத்தியல் கூத்து, பொதுவியல் கூத்து என்ற வழக்காறுகளும் இருந்தன.
நாடகத்தமிழ் ஒரு காலத்தில் பாட்டும் நடனமுமாகவே இருந்தது.

தமிழகத்தில் கி.பி. 6,7 ம் நூற்றாண்டு முதல் கட்டப்பட்ட கோயில்கள்
கட்டகலைக்குப் பெரும் சான்றாக விளங்குகின்றது. தமிழர் கோயில் கட்டும் கலை
நுற்றாண்டு தோறும் தொடந்து இருந்து வந்ததை உலகு எங்கும் பரவியுள்ள கோயில்
எடுத்துரைக்கின்றன. பிற்காலச் சோழர்காலத்தில் தாய்லாந்து முதலான தென்கிழக்கு
ஆசியா நாடுகளிலும் தமிழருடைய கோயில் கட்டடக்கலை செல்வாக்கோடு போற்றப்
பெற்றதை நாம் காணமுடிகிறது. சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை,
கட்டடக்கலை கிய நான்கும் பல நூற்றாண்டுகளாகத் தமிழருக்குரிய பண்பாட்டு
முத்திரையுடன் தோன்றி வளர்ந்து வந்ததை கண்டோம்.

தமிழரைப் பொறுத்த அளவிற்குச் சைவம் எந்த தனிப்பெயர் சூட்டிக்
குறிக்க முடியாவிட்டாலும் தொல் தமிழர் சமயம் பாட்டு, ஆடல் என்ற இரு வகை
கலைகளோடு சேர்ந்து பிறந்ததை உறுதியாகச் சுட்டிக்காட்ட முடியும். நடுகற்கள்
எந்த சமய வழிபாட்டைச் சார்ந்தவை என்று குறிக்க முடியாவிட்டாலும் வழிபாட்டிற்கு
உரியதாக இருந்தன என்பதையும் அதனை ஒட்டித் தொடக்கக் காலப்படைப்புச்
சிற்பமுறையும், ஓவியமுறையும் தோன்றி வளர்ந்தன என்பதையும் உறுதியாகச்
சொல்ல முடியும். சங்க இலக்கியங்கள் சுட்டும் வேலன்ட்டம், முருகனோடு
தொடர்புடையாதாகும். அருளாடல் ஆடலோடு தொடர்புடையது என்பதை எடுத்து
சொல்லவேண்டியதில்லை. குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை ஆ கியன, பெண்கள்
கூட்டமாகக் குழுமி இசையோடு ஆ டல் நிகழ்த்தியத்தைக் காட்டும் சான்றுளாகும்
எனவே, பண்டைத்தமிழர் வாழ்வோடு இசையும், ஆடலும் பின்னிப் பிணைந்தே இருந்தன.

மேற்கண்ட இரண்டும் ஜைனர் பெளத்த வரவாய் இருந்தவை.

அடுத்த, சில நுற்றாண்டுகளில் ஒடுக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு. ஜைனர்கள்
மக்களை உணர்ச்சி வயப்படுவதால் இசைக்கும், டலுக்கும் முன்னுரிமை
கொடுத்துப் போற்றுவதில்லை. இலக்கியங்களில் ஜைனர்கள் தம் கருத்தை
மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கூறியுள்ளனர்.

ஜைனரரான இளங்கோவடிகளால் எழுதப்பெற்ற சிலப்பதிகாரத்தில்
ஆடலிலும், பாடலிலும் வல்ல மாதவி வாழ்க்கையில் தோல்வியுறுவதாக காட்டப்பட்டு
இருக்கிறது. ஆடலில் வல்ல மணிமேகலை இந்திர விழாவில் ஆ டக்கூடாது என்று
மாதவியால் தடுக்கப்பட்ட செய்தியைப் பெளத்தக் காப்பியமான மணிமேகலை
எடுத்துக்காட்டுகிறது. யசோதர காவியம் எனும் ஜைன காப்பியமும் அமிழ்தமதி என்ற
பிரிதொரு ஜைன காப்பியமும் அரசனின் பட்டத்தரசி ஒழுக்கம் குன்றிப்பாடும் ஆற்றல்
தொழுநோயாளியுடன் தொடர்புகொண்டு துற்றப்படுவதையும் காட்டுகிறது.

இசைக்கலை நல்லவர்களையும் அல்லவர் ஆ க்குகிறது என்பது மேற்கண்ட காப்பியத்தின் உட்பொருளாகும்.

ஆடல், பாடல் ஆகியவற்றில் பேரீடுபாடு கொண்டவராக வாழ்ந்த பண்டை தமிழர்
இதில் வேறுபட்டு நின்றனர்....

தமிழருக்கு அவற்றை வெறுத்து ஒதுக்கும் ஜைன,ரிபளத்தங்கள் வேண்டாதனவாக
இருந்ததில் வியப்பு இல்லை. எனவேதான் கி.பி 575 க்குப் பின் பிறகு பாண்டியன்
கடுங்கோள் வருகை ஒட்டித்தமிழகத்தில் ஜைன, பெளத்த மதங்கள் வீழ்ச்சி
அடையத்தொடங்கியது. இதன் அடையாளத்தைத் திருஞான சம்பந்தரின் வரலாறிலும்,
திருநாவுக்கரசரின் வரலாற்றிலும் தெளிவாகப் பார்க்கிறோம். இவ்விருவரும்
இன்னிசையால் இறைவனை வணங்கும் நாயன்மார்களாக வாழ்கின்றனர். "நாளும்
இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என்றே பாராட்டப் பெறுகிறான்

திருவாரூர் கோயிலில் ஆடலிலும், பாடலிலும் வல்லவராக விளங்கியத் தேவரடியாகத்
தொண்டு புரிந்து வந்த பரவை நாச்சியாரைச் சைவ நாயன்மார்களில் ஒருவராகித்
சுந்தரர் காதலித்து மணம்முடித்து கொள்கிறார். 64 நாயன்மார்களுள் திருநீலகண்ட
யாழ்ப்பாணர் இசைத் தமிழிழோடு மிக நெருக்கமான தொடர்பு உடையவர். எனவே
ஜைன பெளத்தம் தடுத்து நிறுத்தி இசை ஆடல் கலைகளில் சைவ சமய
எழுச்சிக்குப் பிறகு பேரார்வம் காட்டினர் எனலாம்.

இச் சுழலிலே கி.பி. 7 ம் நூற்றாண்டில் பல்லவ நாட்டை ஆண்ட மகேந்திர வர்மனுக்குப் பிறகு தமிழகத்தில் கலைப்பாட்டுடன் கட்டப்பட்ட சிவன் கோயில்களின் நுற்றுக்கணக்கான கோயில்களை ஒட்டி வளர்க்கப்பட்ட இசை, ஆடல் கலைகளையும் சேர்த்து எண்ணுதல் வேண்டும். பல்லவமன்னர்களால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் மாமல்லபுரத்தில் தனி இசை மண்டபம் இன்றும் உள்ளது. மகேந்திரவர்மனுக்குச் சித்திரகாரப்புலி என்ற பட்டமே இருந்தது. பல்லவமன்னர்கள் காலத்துச் சைவ ஆ லயங்களும் அவற்றை ஒட்டியச் சிற்பங்கலும் நிறைய உருவாகி என்பதைப் பிற்கலச் சோழர் வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

அத்தோடு மட்டுமல்லாது சோழமன்னர்கள் கட்டடக்கலையுடன், சிற்பக்கலை, இசைக்கலை, ஓவியக்கலை ஆ கியவற்றையும் சேர்த்து வளர்த்தனர். பல்லவர் கால காஞ்சிபுர கைலாயநாதர்கோயிலும் அதன் உள்மண்டபத்தில் உள்ள ஓவியங்களும் சிவன் கோயில்களுடன் ஓவியக்கலையையும் சேர்ந்து வளர்க்கப்பட்டதை எடுத்துரைக்கும் முதல் இராசராசன் தில்லைவாழ் அந்தணர் உதவியுடன் தேவாரத்தை கண்டு எடுத்து, இசை அமைத்துப் பல்வேறு தேவார ஓதுவார்களை நியமித்துப் பாடசெய்தான். தொடர்ந்து சோழ அரசர்களால் இப்பழக்கம் போற்றப் பெற்றதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது.

தமிழகத்தின் கலை வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால், அது பெரும்பாலும்
சமயத்தைச் சார்ந்தே வளர்ந்து இருக்கிறது என்பதை அறியமுடியும். சமயத்தை
விட்டுவிலகி கலைக்காகவே கலை எனும் பார்வைக்குரிய தமிழர் கலை வரலாறு
ஐரோப்பியர் வரவு வரை அமையவில்லை என்றே கூறலாம்.

கலை வளர்த்த வரலற்றில் சைவ சமயத்தின் பங்கு மிகப்பெரியது,குறிப்பிடத்தக்கது.

பாரதம் கண்ட பரதம்


பாரதம் கண்ட எண்ணற்ற கலைகளில் தொன்மையானது பரதம். பரத நாட்டியத்தின் வரலாறு கி.மு 2-வது நூற்றாண்டில் துவங்குகிறது. பரத முனிவர் எழுதி நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவானது பரத நாட்டியம். கி.மு 2 மற்றும் கி.பி. 2-வது நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார் பரத முனி.

கோவில்களில் அக்காலத்தில் தேவதாஸிகள் எனப்படும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் பெண்கள் இருந்தார்கள். இவர்கள்தான் பரதக் கலையை வளர்த்தவர்கள். பரதத்தை முறையாக ஆடி வந்தவர்கள். இந்தக் கலை இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு நாம், அக்கால தேவதாஸிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

மராத்திய, சோழ மன்னர்கள் காலத்தில் பரத நாட்டியம் கொடி கட்டிப் பறந்தது. இவர்களின் ஆட்சிக்காலத்தை, பரதத்தின் பொற்காலம் எனலாம். பரதத்திற்கு சதிர் என்றும் ஒரு பெயர் உண்டு. முன்பு இருந்த பரத நாட்டியத்திற்கும், இப்போதைய வடிவத்திற்கும் இடையே நிறைய, ஆறு வித்தியாசங்கள் இருந்தன.

இன்றைய பரத வடிவத்தை, தஞ்சாவூர் நால்வர் என அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் உருவாக்கினார்கள். இவர்கள் முறைப்படுத்திய பரதம்தான் இன்று ஆடப்பட்டு வருகிறது.

அன்று பரதம் மிகப் புனிதமாக கருதப்பட்டது. பரதக் கலைஞர்களுக்கு ராஜ மரியாதைதான். பொன்னும், பொருளும் மன்னர்களால் வாரி வழங்கப்பட்டது. நல்ல ஆதரவும் இருந்தது. ஆனால் இந்த கோலாகலத்திற்கு ஒரு நாள் முகலாயர்கள் வடிவில் முடிவு வந்தது.

முகலாய மன்னர்களின் வரவிற்குப் பிறகு கோவில்களில் பரதம் ஆடுவது தடைபட்டது. பெர்சிய நாடுகளிலிருந்து நடனக்காரர்களை முகலாயர்கள் இந்தியாவுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தேவதாஸிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களது நடனத்தைப் பார்க்க ஆதரவு குறைந்தது.

முகலாயர்கள் போய், வெள்ளையர்கள் வந்தனர். நிலைமை இன்னும் மோசம் ஆனது. மன்னர்கள், ஜமீன்தார்களின் ஆதரவு குறைந்தது. தேவதாஸிகளுக்குக் கிடைத்து வந்த ஆதரவு நின்று போனது. வயிற்றுப்பாட்டுக்குத் திண்டாட்டம். வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களை விபச்சாரத்திற்குத் தள்ளியது.

கலை என்ற பார்வையிலிருந்து வேறு மாதிரியாக பரதம் பார்க்கப்பட்டதால், பணக்காரர்களும், செல்வந்தர்களும் தங்களது பெண் பிள்ளைகள் பரதம் கற்பதை நிறுத்தினர். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பரதம் இழிவாகப் பார்க்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் முதல் பாதி வரை இந்த நிலை நீடித்தது.

வெள்ளையர் ஆட்சிக்குப் பிறகு நிலைமை மாறியது. பரதத்தின் உண்மை வரலாறு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது. பாரதத்தின் புராதன கலையாக அது பார்க்கப்பட்டது. தேய் பிறையாக இருந்த பரதம், வளர் பிறையானது. அதை வளர்த்தவர்களில் முக்கியமானவர் கலாஷேத்ரா கண்ட ருக்மிணி அருண்டேல் முதலான பலர். இந்தியாவின் முதல் பரதக் கலைக் கூடத்தை நிர்மானித்தவர் ருக்மிணி அருண்டேல்.

Friday, October 24, 2008

ஓவியங்கள்

நிகழ்காலமென்னும் உலகில் நுழைய
கடந்தகாலத்தின் செருப்புக்களின்
தேவையில்லை
அப்படியே கேள்விகளும்
எளிமையானதாய் மென்மையாய்
வன்மமானதாய் சுழலின்தன்மையானதாய்
விடைகளில்லாததாய்
புரிந்துகொள்ளமுடியாததாய்
புறக்கணிப்பின் பொல்லாத பொறுக்கித்தனத்தில்
பொசுங்கிப் போகின்றன அத்தனையும்
சுமந்தபடி செல்கிறேன்
புதுச்செருப்புடனான பயணத்தில்
கழட்டிப்போட்ட செருப்புக்களின்
எண்ணிக்கையைப் பற்றிய கேள்விகள்
எழுப்பும் புன்முறுவலை சுமந்தபடி
















Wednesday, October 22, 2008

வல்லிபுர ஆழ்வார் கோயில்

வல்லிபுரம் என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊராகும். இப்பொழுது இது மிகவும் குடித்தொகை அடர்த்தி குறைந்த இடமாக உள்ளது. பழங்காலத்தில் இவ்விடத்தில் முக்கியமான குடியிருப்புக்கள் இருந்ததற்கான தொல்பொருட் சான்றுகள் கிடைத்துள்ளன. இதனையும், வேறு இலக்கிய ஆதாரங்க ளையும் முன்வைத்து, சிங்கைநகர் என்று குறிப்பிடப்படுகின்ற யாழ்ப்பாண அரசின் தலைநகரமே வல்லிபுரம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்விடத்தில் பிரபலமான வல்லிபுர ஆழ்வார் கோயில் ஆலயமும் உண்டு